திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக தமிழகத் தொழிலாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருப்பதியை அடுத்த பாக்கராபேட்டையில் உள்ள தலைகோனா அருவி பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட செம்மரத் தொழிலாளர்கள் அங்கு மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை வனத் துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதில் 2 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 11 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினர், அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரி மாவட்டம், சித்தேரியைச் சேர்ந்த வெட்டியப்பன் (32), தீர்த்தகிரி (41) என்பது தெரியவந்தது.