திருப்பத்தூரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால் பேருந்து வழித்தடங்களில் மாற்றும் செய்யப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் ரூ. 125 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், வேலூர், திருப்பதி, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட வழித் தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய வழித் தடங்கள் வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகளும் வழக்கம் போல புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே செல்லும். இச்சேவை திங்கள்கிழமை (ஏப்ரல் 24) முதல் தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமார், மேலாளர் சூரியபிரகாஷ், பணிதள மேலாளர் அன்பரசு, அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (திருப்பத்தூர்) முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.