குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பு, ராசப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(46). மண்பாண்டத் தொழிலாளியானஇவர், ஞாயிற்றுக்கிழமை காலை ஊராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான தெரு விளக்கை அணைக்க சுவிட்சை துண்டிக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.