குடியாத்தம் தரணம்பேட்டை, திருத்தணிகை முருகன், பரணி வேல், தேன் காவடி, புஷ்பக் காவடி கமிட்டி சார்பில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை தரணம்பேட்டை முத்து விநாயகர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு தேன் காவடி அபிஷேகம் நடைபெற்றது.
மாலை தேன் காவடி விழாவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஊர்வலத்தில் கேரள செண்டை மேளம், காவடி பஜனைக் குழுவினர் பக்திப் பாடல்கள் பாடியபடி சென்றனர்.
இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தரணம்பேட்டை காவடி, பஜனைக் குழுவினர் செய்திருந்தனர்.