வேலூர் மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் கோயில் செயல் அலுவலராக சிவஞானம் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோயில் செயல் அலுவலராக வேம்புலியம்மன் கோயில் செயல் அலுவலர் மாதவன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், இக்கோயில் செயல் அலுவலராக கடலூர் மாவட்டம், வடலூர் சத்யதருமசாலை கோயிலில் பணியாற்றிய சிவஞானம் நியமிக்கப்பட்டார்.
இதுதவிர, வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் செயல் அலுவலர் குமரன் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பணியாற்றி வந்த வடிவேல் வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.