ரயில்வே சுரங்கப் பாதை அமையும் இடம்: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்படும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்படும் இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள நியூடவுன் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இவ்வழியாக நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடி திறக்கப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை மற்றும் மாநில அரசு வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க
ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.
இந்நிலையில், ரயில்வே சுரங்கப் பாதை அமையவுள்ள பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன், வருவாய்த் துறையினர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com