நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு பந்தல்கால்: 7 அமைச்சர்கள் வருகை

வேலூர் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு பந்தல்கால் நடும் விழாவில் மாநில அமைச்சர்கள் 7 பேர் கலந்து கொள்கின்றனர்.

வேலூர் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு பந்தல்கால் நடும் விழாவில் மாநில அமைச்சர்கள் 7 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூர் கோட்டை மைதானத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பந்தல்கால் நடும் விழாவில் மாநில அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்டு வரும் கட்டுரை, பேச்சு, எழுத்துப் போட்டிகளில் வெற்றி பெறுவோர், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசுகள் வழங்குவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com