ஆனைமடுகு தடுப்பணை: சார்-ஆட்சியர் ஆய்வு

ஆம்பூர் ஆனைமடுகு தடுப்பணையை திருப்பத்தூர் சார்-ஆட்சியர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆம்பூர் ஆனைமடுகு தடுப்பணையை திருப்பத்தூர் சார்-ஆட்சியர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆம்பூர் ஆனைமடுகு தடுப்பணை அண்மையில் பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் ஆம்பூருக்கு வருகை தந்த சார்-ஆட்சியர் கார்த்திகேயன் ஆனைமடுகு தடுப்பணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தடுப்பணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் செல்லும் கானாறு பாதை தூர்ந்து போயுள்ளதால் அதனை தூர் வாருவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் தடுப்பணையில் விநாயகர் சிலைகளைக் கரைக்க உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆம்பூர் வட்டாட்சியர் மீராபென் காந்தி, வருவாய் ஆய்வாளர் பாரதி, வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com