குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அங்கிருந்த வாழை மரங்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.
ஆந்திர மாநில வனப் பகுதியில் இருந்து வந்த யானைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் கிராமத்துக்குள் நுழைந்துள்ளது.
அங்கு மொகிலி என்பவரின் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை யானைக் கூட்டம் நாசம் செய்தது.
இதையடுத்து கிராம மக்கள் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.