மண்டல பளு, வலு தூக்கும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கல்லூரி மாணவர்கள் வென்றனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் மண்டல அளவிலான பளு தூக்கும், வலு தூக்கும் போட்டிகள் மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் வேலூர், கடலூர் மண்டலங்களைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் அப்துல் அக்கீம் கல்லூரியின் மாணவர்கள் பளு தூக்கும் போட்டியில் 236 புள்ளிகளும், வலு தூக்கும் போட்டியில் 186 புள்ளிகளும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கல்லூரித் தாளாளர் அப்ரார் அஹமது, கல்லூரியின் முதல்வர் எஸ்.ஏ. சாஜித், உடற்கல்வி இயக்குநர் வே.ராஜா ஆகியோர் பாராட்டினர்.