வேலூர் பார்வையற்றோர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். சுய தொழில் தொடங்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம், உதவித் தொகை ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். பிற மாவட்டங்களில் பார்வையற்றோருக்கு ஒளிரும் ஊன்றுகோல் வழங்கப்படுவது போல வேலூர் மாவட்டத்திலும் வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் அனைத்து அரசு விரைவு பேருந்துகளிலும் அனுமதிக்க ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.