அம்மூரில் நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் தொடக்கம்

வாலாஜாபேட்டை வட்டம், அம்மூர் பேரூராட்சியில் அனைத்து நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் தொடக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை வட்டம், அம்மூர் பேரூராட்சியில் அனைத்து நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் தொடக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நெல் வியாபாரிகள் ஒன்றிணைந்து அம்மூர் அனைத்து நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.
விழாவுக்கு, சங்கத்தின் கௌரவத் தலைவர் எம்.செல்வமணி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் டி.விஜயன் முன்னிலை வகித்தார். செயலாளர் என்.எஸ்.ஜி.சரவணன் வரவேற்றார். தமிழ்நாடு நெல், அரிசி வியாபாரிகள் சங்கப் பொருளாளர் சி.பி.சுப்பிரமணி குத்துவிளக்கு ஏற்றி சங்கப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
வேலூர் நெல், அரிசி வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜி.அருணகிரி, சங்கத் தலைவர்கள் எஸ்.திருநாவுக்கரசு(குடியாத்தம்), வி.டி.செல்வராஜ் (திமிரி), வாலாஜாபேட்டை சங்கச் செயலாளர் ஒய்.அக்பர் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்மூர் சங்கத் துணைத் தலைவர் எ.மேகநாதன், துணைச் செயலாளர் கே.ஏகாம்பரம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சுப்பிரமணி, கேசவன், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com