இளம்பெண் தற்கொலை

திருப்பத்தூர் அருகே திருமணமான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் அருகே திருமணமான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூரை அடுத்த ஜம்மனப்புதூர் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. ஓட்டுநரான இவரது மனைவி கோமதி (22). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.
கோமதி அடிக்கடி தெலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கோமதி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் அவர்களுக்குள் மீண்டும் தகாராறு ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் உள்ள தனி அறையில் கோமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் திருப்பத்தூர் சார்-ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com