கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் இளைய தலைமுறை அமைப்பின் இளைஞர்கள் சார்பில் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது. காவல் துறையினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.