பைக் திருடிய மர்ம நபர் சிசிடிவி கேமராவில் பதிவு

திருப்பத்தூரில் மர்ம நபர் பைக்கை திருடிச் சென்றார். அவர் பைக்கை திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருப்பத்தூரில் மர்ம நபர் பைக்கை திருடிச் சென்றார். அவர் பைக்கை திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் அருகே சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (29). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை தனது பைக்கை துரைநகரில் உள்ள மருத்துவர் சிவகுமார் வீட்டின் முன் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்து பார்த்த போது பைக் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியைப் பார்த்ததில், மர்ம நபர் ஒருவர் ஜான்போஸ்கோவின் பைக்கை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com