மரத்தில் பைக் மோதியதில் இளைஞர் சாவு

ஆற்காடு அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.

ஆற்காடு அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.
ஆற்காடு வட்டம், கனியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (26). கட்டடத் தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை திமிரியில் இருந்து கலவை செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறிய பைக் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com