மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்

ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாமகவினர் ஆட்சியர் அலுவலகம் எதிரே

ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாமகவினர் ஆட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இளவழகன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் ராஜா வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் என்.டி. சண்முகம், பொன்னுசாமி, மாவட்டச் செயலாளர் கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com