ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் விஷ்வகல்யாண ஹோமம், ருத்ர ஹோமம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் விஷ்வ கல்யாண ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றன.

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் விஷ்வ கல்யாண ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றன.
ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் நிறுவனர் ஸ்ரீசக்தி அம்மா 42-ஆவது ஜயந்தி விழா ஜனவரி 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) முதல் தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையும் விஷ்வ கல்யாண ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தினந்தோறும் இரு வேளையும் விஷ்வ கல்யாண ஹோமம் நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை ருத்ர ஹோமம் நடைபெற்றது. ருத்ர ஹோமத்தின் பூர்ணாஹுதி நிகழ்ச்சியில் ஸ்ரீசக்தி அம்மா பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com