ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரின் செல்லிடப்பேசி எண்ணின் கட்செவி அஞ்சலுக்கு ஆபாசபடம் அனுப்பிய மர்ம நபர் குறித்து ஏலகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை குறளகத்தில், ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக பணியாற்றி வருபவர் உமாசங்கர். இவர், பணி நிமித்தமாக திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஏலகிரி மலைக்கு வந்து, அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். இவரது கட்செவி அஞ்சலுக்கு ஒரு குறிப்பிட்ட செல்லிடப்பேசி எண்ணிலிருந்து 20-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் வந்ததாகத் தெரிகிறது. அவற்றை அனுப்பிய அந்த மர்ம நபர் பின்பு, குரூப்பிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆபாச படங்களை வெளியிட்டது குறித்து விசாரிக்க வேண்டும் என ஏலகிரி காவல் நிலையத்தில் உமாசங்கர் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.