ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
ஆற்காட்டை அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி விமலா (30). இவர் ஞாயிற்றுக்கிழமை தாஜ்புரா பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய அவர்அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.