சென்னை மண்டல அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே சதுரங்கம், யோகா போட்டிகள் அரக்கோணத்தில் அண்மையில் நடைபெற்றது.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இரு நாள்கள் இப்போட்டிகள் நடைபெற்றன.
இதில், ஆவடி, புதுச்சேரி, காரைக்கால், அரக்கோணம், தக்கோலம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகள் தொடக்க விழாவுக்கு அரக்கோணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். முன்னாள் ஆசிரியர்கள் மீனிலோசினி, சங்கரன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். யோகா போட்டியில் 80 மாணவ, மாணவிகளும், சதுரங்க போட்டியில் 103 மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், உடற்பயிற்சி ஆசிரியர்கள் தர்மேந்தர்சிங், காளிதாஸ், ராதாகிருஷ்ணன், கீதா, வசந்தி உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.