தடகளப் போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்று

வேலூரில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் உள்ளிட்டோருக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது.

வேலூரில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் உள்ளிட்டோருக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது.
 வேலூர் தடகளச் சங்கம் சார்பில், மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கான தடகளப் போட்டிகள் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  பள்ளி மாணவ, மாணவியருக்கு 14, 16, 18 வயதுக்குள்பட்டோருக்கும், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கு 100, 200, 400, 1500 மீட்டர், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.
இதில், 16 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை ஏ.கே.ரகுன்ராஜாவும், இரண்டாமிடத்தை பி.நிமலனும், மூன்றாமிடத்தை பி.நவீன்குமாரும் பிடித்தனர்.
அதேபோல, ஆண்கள் பொதுப் பிரிவினருக்கான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தை கே.தினகரனும், இரண்டாமிடத்தை வி.நிதின்குமாரும், மூன்றாமிடத்தை பி.கமல்தாஸும் பெற்றனர். அதேபோல, பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.
 இதற்கான ஏற்பாடுகளை வேலூர் தடகளச் சங்கத் தலைவர் கீதாமதாய், செயலாளர் கே.செந்தில்குமார், துணைத் தலைவர் ஆர்.சுதாகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com