வாணியம்பாடியில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மெத்தை கடை சேதம் ஏற்பட்டது.
வாணியம்பாடி புதூரில் ரயில்வே மேம்பாலம் அருகில் பஞ்சு மெத்தை கடை நடத்தி வருபவர் நியாமத் (30). இவரது கடையில் வைக்கப்பட்டிருந்த பாய்லர் திங்கள்கிழமை திடீரென வெடித்தது. இதனால், கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.