மாவட்ட அளவிலான தட களப் போட்டியில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்.
வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வட்டெறிதல், குண்டெறிதல் போட்டிகளில் இக்கல்லூரி மாணவிகள் முதலிடமும், ஈட்டி எறிதல், சங்கலி குண்டெறிதல் போட்டிகளில் 2- ஆம் இடமும் பெற்றனர். இதேபோல், 400 மீ. ஓட்டத்தில் இக்கல்லூரி மாணவி 3- ஆம் இடம் பிடித்தார். போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டி, பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினர்.