செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கத்தை அடுத்த விண்ணவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலாஜியின் மனைவி வனிதா(30). இவர், ஞாயிற்றுக்கிழமை கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் அந்தக் கிராமத்திலுள்ள செங்கம் - திருவண்ணாமலை சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது, செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி, வனிதா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மது போதையில் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரான செங்கம் துக்காப்பேட்டையைச் சேர்ந்த நூர்முகமதுவை(37) பொதுமக்கள் பிடித்து பாய்ச்சல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ததுடன், லாரியை பறிமுதல் செய்தனர்.