வீடு புகுந்து 18 பவுன் நகைகள் திருட்டு

அரக்கோணம் நகரில் வீடு புகுந்து 18 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ரூ. 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.

அரக்கோணம் நகரில் வீடு புகுந்து 18 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ரூ. 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
அரக்கோணம் கணேஷ் நகர் முதலாவது தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (60). இவர், தனியார் ஆலையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், தனது வீட்டின் முதல் மாடியில் சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள், தரைத்தளத்தில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை ராஜேந்திரனின் மனைவி மைனாவதி கீழே இறங்கி வந்தபோது நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு போன பொருள்களின் மதிப்பு ரூ. 4 லட்சம் எனக் கூறப்படுகிறது.
தகவலறிந்த அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம், நகர ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் அங்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், வேலூரில் இருந்து தடயவியல் துறை நிபுணர்கள் வந்து கைரேகைகளைப் பதிவு செய்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் திருட்டு: அரக்கோணம் நகரில் கடந்த ஒரு மாதமாக பைக் திருட்டு, பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு, பூட்டிய வீடுகளில் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை, அரக்கோணம் கைனூரில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள் திருட்டு போனதும், அதே நாளில் கணேஷ் நகரில் முதல் தெருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கத் தாலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com