சோளிங்கரில் வேலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் எல்.கே.கார்த்திராசா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் சங்கச் செயலாளர் எம்.ராமராஜன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் அன்புமணி ராமதாஸை வரவழைத்து வேலூர் மாவட்டத்தில் விரைவில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில இளைஞர் சங்கச் செயலாளர்கள் ச.தீனதயாளன், மூ.ராஜேஸ்வரி பிரியா, மாநில துணைப் பொதுச் செயலாளர் க.சரவணன், மாவட்டச் செயலாளர் அ.ம.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.