அருங்காட்சியகம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பிரசாரப் பேருந்து வேலூருக்கு திங்கள்கிழமை வந்தது.
தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறைக்குச் சொந்தமான நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை வந்தது.
இதனைப் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, தொரப்பாடி வரையில் சென்ற இப் பிரசாரப் பேருந்தை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேருந்து செவ்வாய்க்
கிழமை பள்ளிகொண்டா மற்றும் சுற்றியுள்ள பகுதிக்கும், புதன்கிழமை ஊசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும், வியாழக்கிழமை காட்பாடி, கே.வி.குப்பத்துக்கும், வெள்ளிக்கிழமை ஆம்பூர், ஜோலார்பேட்டைக்கும், சனிக்கிழமை வேலூருக்கும் செல்கிறது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நிறுத்தப்படும் பேருந்தை மாணவர்கள், பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.