வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளர் எல்.சி.மணி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.காளப்பன், நிர்வாகிகள் நிலவு குப்புசாமி, எம்.ஜோதி, பத்மாமணி, அல்லாபகஷ், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.