ஆற்காட்டை அடுத்த வேப்பூர் குளோபல் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனைப் பள்ளியின் தாளாளர் ராம் பிரசாத் தொடங்கி வைத்தார். சதுரங்கக் கழக மாவட்ட தலைவர் மணிகண்டசாமி, செயலாளர் சண்முகம், இணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழில் சதுரங்க கழகத் தலைவர் தினகரன் வரவேற்றார். போட்டிகள் 8, 10 மற்றும் 13, 16 வயதுக்கு உள்பட்டோர் என நான்கு பிரிவுகளில் நடைபெ"ற்றது. இதில் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற 165 பேருக்கு சான்றிதழ்களை எழில் சதுரங்க கழகச் செயலாளர் சங்கீதபிரியா வழங்கினார்.