வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு கட்சியின் மத்திய மாவட்டத் தலைவர் ஜெ. ஜோதி தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜெ. கண்ணன் வரவேற்றார்.
கட்சி நிர்வாகிகள் வில்வநாதன், பன்னீர்செல்வம், என்.கே. துரைசாமி, அப்துல் ரஷீத், சிவா வெங்கடேசன், ஜோதி கணேசன், பாரத் நவீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்...
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி ஆம்பூரில் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடை
பெற்றது.
வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ச. பிரபு தலைமை வகித்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன் இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அருள் பெத்தையா இனிப்பு வழங்கினார். ஸ்ரீதர், கொத்தூர் மகேஷ், குமரேசன், சமியுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் சுமார் 200}க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
ராணிப்பேட்டையில்....
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 48}ஆ வது பிறந்த நாள், தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
முத்துகடை காந்தி சிலை முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட துணைத் தலைவர் பி.மோகன் வரவேற்றார்.
நகர நிர்வாகிகள் எஸ்.எம்.இப்ராஹிம், எம்.மோகனசுப்பிரமணியம், கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.பஞ்சாட்சரம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் வி.நாகேஷ், முன்னாள் மாவட்டத் தலைவர் கே.ஏ.சேகர், மகளிர் அணித் தலைவி பி.சந்திரா, மாவட்ட சிறுபான்மைப்பிரிவுத் தலைவர் கே.ஓ.நிஷாத், மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடியில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரீத் அஹமத் தலைமையில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் சிறுபான்மைத் துறை மாநிலத் தலைவர் அ.அஸ்லம் பாஷா கலந்து கொண்டு அரசு மருத்துவமனையில் ராகுல் காந்தி பிறந்த நாளில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்.
அரசு மருத்துவமனையின் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டி மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகர எஸ்சி.எஸ்டி பிரிவு தலைவர் ராஜ்குமார், மாவட்ட சிறுபான்மைதுறை தலைவர் இலியாஸ்கான், நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் கவியரசன், நகர சிறுபான்மைத் துறை தலைவர் முதஸீர்பாஷா, சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பைசல் அமீன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.