பேர்ணாம்பட்டு அருகே கோயில் கருவறையில் இருந்த அம்மன் சிலை திருட்டு போனது.
பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் எதிரே சுமார் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருப்பதி கெங்கையம்மன் கோயில் உள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, 2 அடி உயர கல்லாலான மூலவர் சிலையை மர்ம நபர்கள் பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்...
இதற்கிடையில் சிலையை திருடிச் சென்றவர்களை உடனடியாக கைது செய்து சிலையை மீட்கக் கோரி விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கோயில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த குடியாத்தம் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.