அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை வழங்கல்

சோளிங்கர் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சோளிங்கர் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. கோபால் தலைமை வகித்தார். திட்டச் செயல் அலுவலர்  ஜெ.அன்பு செல்வம் வரவேற்றார். சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி. பார்த்தீபன் கலந்து கொண்டு 154 பயனாளிகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணை சான்று வழங்கினார்.
இதில்,  முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் சீனிவாசன், சுரேஷ், வெங்குபட்டு சம்பத், இளநிலை உதவியாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com