மூன்றாம் தலை முறை என்ற அமைப்பின் சார்பில் பல்வேறு பள்ளிகளின் மாணவர்களுக்கிடையே ஓவியப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.
இதில், ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் மகாலட்சுமி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4}ஆம் வகுப்பு மாணவர் ஏ.எஸ்.கோகுல் குமார் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். சிறப்பிடம் பெற்ற மாணவரை பள்ளியின் தலைவர் பாலாஜி லோகநாதன், முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டி சான்று வழங்கினர்.