புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

வேலூரில் புதிதாக தொடங்கப்பட்ட ரோட்டரி மாவட்டத்தின் ஆளுநர் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

வேலூரில் புதிதாக தொடங்கப்பட்ட ரோட்டரி மாவட்டத்தின் ஆளுநர் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
வேலூரில் ரோட்டரி மாவட்டத்தின் முதல் ஆளுநராக அம்பாலால் குரூப்ஸ் தலைவர் கே.ஜவரிலால் ஜெயினுக்கு, ரோட்டரி முன்னாள் ஆளுநர் நடராஜன் நாகோஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செயலாளராக ஜே.கே.என்.பழனி பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் ஆளுநர்கள் அபிராமி ராமநாதன், ஜே.பி.காம்தார், ஆனந்த், ராஜா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.  இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com