நாட்டறம்பள்ளி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி சின்னகிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் நிர்மல் குமார் (12). இவர், நாட்டறம்பள்ளி அரசினர்ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7}ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டருகே உள்ள மரத்தில் விறகு வெட்ட ஏறிய போது, திடீரென தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த நிர்மல் குமாரை உறவினர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நிர்மல்குமார் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.