கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டுமெனக் கோரி, ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ்நாடு

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டுமெனக் கோரி, ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வேலூர் மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மாரி செயல் திட்ட அறிக்கையையும், மாநில பொருளாளர் மனோகரன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாநிலத் தலைவர் ராசமாணிக்கம் பங்கேற்றுப் பேசினார்.   மாநில செயலாளர் பாஸ்கரன், தலைமை நிலைய செயலாளர் பன்னீர்செல்வம், வேலூர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மாநில நிர்வாகிகள் கணேசன், செந்தில்நாதன், ஜானகிராமன், முன்னாள் மாநில தலைவர்கள் பழனிசாமி, சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டப் பொருளாளர் கபிலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com