ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு தமாகா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மேற்கு மாவட்ட தமாகா தலைவர் கே.குப்புசாமி கூறியதாவது:
இச்சம்பவத்துக்கு, வேலூர் மேற்கு மாவட்ட தமாகா கண்டனம் தெரிவிக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, ஆண் போலீஸார் அடித்து விரட்டுகின்றனர்.
இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, மதுக் கடைக்கு எதிராகப் போராடும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். பெண்களைத் தாக்கிய போலீஸாரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும். பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அவர்களை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றார்.