வேலூர் மாவட்டத்தில் 34 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலூர் சத்துவாச்சாரி எத்திராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த கலந்தாய்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி.துரைசாமி தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 34 தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு 47 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
ஆன்லைன் முறையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் தகுதியானவர்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இதேபோல், அண்ணாசாலை ஆபீஸர்ஸ் லைனில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.