வித்யாலட்சுமி மெட்ரிக். பள்ளி மாணவர்கள் சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி ஆர்.பவித்ரா 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், பி.தீபா 494 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடமும், எஸ்.ஷிவானி, எஸ்.விக்ரம் ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும் பிடித்துள்ளனர்.
கணிதத்தில் 15 பேரும், அறிவியலில் 16 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகையும், 2-ஆம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ. 30 ஆயிரம் ஊக்கத் தொகையும், 3-ஆம் மதிப்பெண் பெற்ற 2 பேருக்கு ரூ. 20 ஆயிரம் ஊக்கத் தொகையும், பள்ளித் தாளாளர் எஸ்.அசோக்குமார், பொருளாளர் ஏ.அறிவுக்கரசி ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com