பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி ஆர்.பவித்ரா 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், பி.தீபா 494 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடமும், எஸ்.ஷிவானி, எஸ்.விக்ரம் ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும் பிடித்துள்ளனர்.
கணிதத்தில் 15 பேரும், அறிவியலில் 16 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகையும், 2-ஆம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூ. 30 ஆயிரம் ஊக்கத் தொகையும், 3-ஆம் மதிப்பெண் பெற்ற 2 பேருக்கு ரூ. 20 ஆயிரம் ஊக்கத் தொகையும், பள்ளித் தாளாளர் எஸ்.அசோக்குமார், பொருளாளர் ஏ.அறிவுக்கரசி ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.