மாந்தாங்கல் மோட்டூர் திரௌபதியம்மன் கோயிலில் அறுபடை முருக பக்தர்கள் இயக்கத்தினர் நடத்திய பால்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள்
பங்கேற்றனர்.
ராணிப்பேட்டையை அடுத்த மாந்தங்கல் மோட்டூர் திரௌபதியம்மன் கோயிலில் அறுபடை முருக பக்தர்கள் இயக்கத்தினரின் 9 நாள் புனித யாத்திரை விழா வெள்ளிக்கிழமைதொடங்கியது.
இதையொட்டி மாந்தாங்கல் மோட்டூர் கன்னிகோயிலில் இருந்து மாலை 5 மணியளவில் பால்குட ஊர்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் திரௌபதியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து, விநாயகருக்கும், முருகப் பெருமானுக்கும், திரௌபதியம்மனுக்கும் பாலாபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து யாக சாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பால்குடம் எடுத்துச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அறுபடை முருக பக்தர்கள் 9 நாள் புனித யாத்திரைக்கு புறப்பட்டுச்சென்றனர்.