வேலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில், 10 முதல் 20 வயது வரை உள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு சிலம்பம், யோகா குறித்த கோடை கால பயிற்சி முகாம் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வேலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் ஜே.லட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.ராஜேஸ்வரி வரவேற்றார். கே.எம்.ஜி. கல்லூரி மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வழக்குரைஞர்கள் கே.எம்.பூபதி, எஸ்.சம்பத்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் த.மணி, பி.முகேஷ்குமார், தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் என்.கருணாநிதி, கபடி தேசிய நடுவர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜி.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
பயிற்சியில் குடியாத்தம், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, கார்னாம்பட்டு, சோளிங்கர், அரக்கோணம், ஜோலார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.