வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவிலில் உள்ள ஸ்ரீபுத்து மாரியம்மன் கோயிலில் 59-ஆம் ஆண்டு வைகாசி மாத திருவிழா அண்மையில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அம்மன் சந்நிதியை அடைந்தது. காலை முதல் மாலை வரை 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டும், மா விளக்கு ஏற்றி பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து பம்பை, சிலம்பாட்டம், ஒத்தையடி மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு வாண வேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.