சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு அண்மையில் நடைபெற்றது.
இதையொட்டி உற்சவர் பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆதிகேசவபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் பூஜையும் நடந்தது.
மேலும் நாகசுர வித்வான்கள் அமிர்தவர்ஷினி, மேக வர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி ராகங்களை வாசித்தனர்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி.பார்த்தீபன் தலைமை வகித்தார். கோயில் உதவி ஆணையர் ரேணுகாதேவி, முன்னாள் எம்.பி. சி.கோபால், மற்றும் அதிமுக நிர்வாகிகள் குப்பன், ராஜா, சீனிவாசன், ரமேஷி, சுரேஷ், ராமு, குட்டி(எ) ரவி, கோயில் கண்காணிப்பாளர் வேதமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.