திருப்பத்தூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, மின்விசைப் பம்பை எம்எல்ஏ நல்லதம்பி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட குள்ளாச்சாரி வட்டத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. இதுகுறித்து எம்எல்ஏ நல்லதம்பியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதுபற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, நகராட்சி சிறப்பு நிதிமூலம் புதிய ஆழ்துளைக் கிணறு, மின்விசைப் பம்பு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பணிகள் நிறைவடைந்து, அதனை எம்எல்ஏ நல்லதம்பி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.