இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குடியாத்தம் நகர பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரவையின் நகர தலைவர் ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார். எஸ்.செல்வம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.சுடரொளியன், நகரச் செயலர் ஜி.யுவராஜ், என். நவாஸ்ஷெரீப், எஸ்.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.
நியாய விலைக் கடைகளில் 14 வகையான அத்தியாவசிய பொருள்களை முறையாக வழங்க வேண்டும். தமிழகத்துக்குத் தர வேண்டிய ரேஷன் மானியத்தை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.
கல்வி வியாபாரமாவதை தடுக்க வேண்டும். குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கு பயனற்ற சாலைகளை சீரமைக்க வேண்டும். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.