90 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தி ல் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தி ல் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் எம்.அன்பழகன் வரவேற்றார். விழாவில் ராணிப்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.காந்தி 90 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.
தொடர்ந்து, வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழை பள்ளி மாணவர்கள் அவரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், நகர பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com