ஆற்காடு அருகே கார் மோதிய விபத்தில் பெண் இறந்தார்.
ஆற்காட்டை அடுத்த சாம்பசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மனைவி முனியம்மாள் (50).
விவசாய கூலித் தொழிலாளி இவர், திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கிராமத்தில் உள்ள தனது மகள் கங்கா வீட்டிற்குச் சென்றார்.
இந்நிலையில், திங்கள்கிழமை முனியம்மாள், மகள் கங்காவுடன் அப்பகுதியில் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த கார் முனியம்மாள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
அருகே இருந்தவர்கள் முனியம்மாளை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.