குடிநீர் விநியோகம் கோரி சாலை மறியல்

சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சி 1-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பழைய காட்பாடி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் காட்பாடி-திருவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்தது அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அரக்கோணம்
மேல்பாக்கம் கிராமத்தில்...
அரக்கோணம் அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணத்தை அடுத்து உள்ள மேல்பாக்கம் கிராமத்தில் கடந்த 10 நாள்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் வெகு தொலைவு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் அரக்கோணம்-ஒச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறித்து அங்கு வந்த நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் செளந்தரராஜன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரு தினங்களில் சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com