நெமிலி பாலா பீடத்தில் பாலா ஜயந்தி விழா

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் பாலா ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் பாலா ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஐப்பசி பூர நட்சத்திர தினம், பாலா பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
விழாவுக்கு பாலா பீட பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்தார். இதில், "பூரமதில் பிறந்தாள் பூரணமாய்' என்ற குறுந்தகட்டையும், புதிதாக உருவாக்கப்பட்ட பாலா வண்ண உருவப்படத்தையும் பீடாதிபதி எழில்மணி வெளியிட, கண் சிறப்பு மருத்துவர் ஏ.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பாலா பீட நிர்வாகி மோகன், நெமிலி இறைபணி மன்றச் செயலாளர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com